அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நரேங்கி ராணுவ கண்டோன்மெண்ட் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் யானை ஒன்று குழந்தைபோல் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவு தேடி வந்த யானை பூங்காவில் சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடுவதற்காக கட்டி இருந்த டயர்களுக்கு நடுவே புகுந்து முன்னும் பின்னும் விளையாடிய காட்சி செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது.