​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா அமைதியை விரும்பும் தேசம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published : Oct 17, 2022 6:41 AM

இந்தியா அமைதியை விரும்பும் தேசம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Oct 17, 2022 6:41 AM

இந்தியாவின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.

டெல்லியில் ஆயுதப்படை வீரர்கள்-சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுதப் படைகளுக்கு உள்நாட்டு அதிநவீன ஆயுதங்களை வழங்கி, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்றார்.

எல்லைகளில் கண்காணிப்பு தீவீரப்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது என்றும் கூறினார்.

மத ரீதியிலான தடைகளைத் தாண்டி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.