அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
காணொலி மூலம் அதனை தொடங்கி வைத்தபின் பேசிய பிரதமர், ஏழைகளின் வீட்டு வாசலுக்கே வங்கிச்சேவையை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும், கடைக் கோடி பகுதிகளிலும் வங்கிகள் திறக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.