மத்திய அரசின் பயனாளிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க அனைத்து மத்திய அமைச்சர்களையும் ஒரு மாதத்துக்குள் தமிழகம் செல்லும்படி பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா, குறை எதுவும் உள்ளதா என கருத்து கேட்க மத்திய அமைச்சர்களை தமிழகம் செல்லும்படி பிரதமர் கேட்டிருப்பதாகவும், இதுவரை 20 பேர் வந்துள்ளதாகவும், இன்னும் 20 நாள்களில் 50 அமைச்சர்கள் வர இருப்பதாகவும் குறிப்பிட்டார்.