கோவையில், திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த அண்ணனை, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பாளையம் புதூரைச் சேர்ந்த சகோதர்களான ரங்கராஜ் மற்றும் குபேந்திரன், கருத்து வேறுபாடு காரணமாக தங்களது மனைவிகளை பிரிந்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், குபேந்திரன் வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழங்கியுள்ளார்.
அந்த பெண் திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறியதும் குபேந்திரன் பேசுவதை நிறுத்திக் கொண்டதால், வீடு தேடி வந்த பெண் குபேந்திரனுடன் திருமணம் செய்து வைக்குமாறு ரங்கராஜிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது இந்த விவகாரத்தை அறிந்த ரங்கராஜ், குபேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குபேந்திரன், மது அருந்துவிட்டு வந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை வெட்டிக் கொலை செய்ததாக போலீசார்