​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியே ஆலோசனை.!

Published : Jun 18, 2022 5:52 PM

சென்னையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியே ஆலோசனை.!

Jun 18, 2022 5:52 PM

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்கள் 64 பேரும், கட்சியின் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒற்றை தலைமையை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர முடியாது என்று கட்சியின் சட்டவிதிகளை காட்டி ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மறுத்து உள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்ற முழக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவரவர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 64 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவரது வீட்டிற்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் நேரில் வந்து ஆலோசனையில் பங்கேற்றனர்.