​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூரில் 4 வயது மகனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Published : May 21, 2022 9:09 PM

கரூரில் 4 வயது மகனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

May 21, 2022 9:09 PM

கரூர் அருகே கவனக்குறைவால் 4 வயது மகனின் கண்பார்வை பறிபோய்விட்ட குற்ற உணர்ச்சியில், அவனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.

கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி , வீட்டிலேயே தையல் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் துணி வெட்டியபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கனிஷின் இடது கண்ணில் கத்தரிக்கோலின் கூர்மையான பகுதி குத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் பார்வை பறிபோன நிலையில், தன் அலட்சியமே காரணம் என உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார் முத்துலட்சுமி.