​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்த ஹவாலா நன்கொடை.. ஈரோட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் நபரை கைது செய்த சி.பி.ஐ..!

Published : May 11, 2022 7:42 PM

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்த ஹவாலா நன்கொடை.. ஈரோட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் நபரை கைது செய்த சி.பி.ஐ..!

May 11, 2022 7:42 PM

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற்றது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த வாகாஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.

சட்டவிரோதமாக நன்கொடை பெற்றது தொடர்பாக நாடு முழுவதும் பல தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்புடைய  40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.   

ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தும் வாகாசை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், வரும் 13-ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.