​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு

Published : May 11, 2022 11:15 AM

மதுரையில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு

May 11, 2022 11:15 AM

மதுரையில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக மாவட்ட தலைவர் சரவணன் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்திற்காக அழகர்கோவில் சாலையில் உரிய அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டன.

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.