​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பராமரிக்க முடியாததால் பாட்டியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த பேத்திகள்...நெல்லையில் கொடூரம்!

Published : May 06, 2022 6:34 AM



பராமரிக்க முடியாததால் பாட்டியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த பேத்திகள்...நெல்லையில் கொடூரம்!

May 06, 2022 6:34 AM

நெல்லை பேட்டை அருகே பராமரிக்க முடியாத காரணத்தால் பாட்டியை தீ வைத்து எரித்து கொலை செய்த 2 பேத்திகள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் உள்ள ஆதாம் நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதிய வேளையில் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி உதவியால் உடலை கொண்டு வந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் வயது மூப்பு காரணமாக பாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியாத நிலையில் அவரை தீ வைத்து எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.