​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Published : Apr 12, 2022 4:44 PM



கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Apr 12, 2022 4:44 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால், 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி - கிட்டாண்அம்மாள் தம்பதிக்கு மூன்று மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் பழனிசாமியின் கடைசி மகனான 6ஆம் வகுப்பு படித்து வந்த அர்ஜுனன், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தபின் தந்தையிடம் கேம் விளையாட செல்போன் கேட்டுள்ளான்.

ஆனால் பழனிசாமி செல்போன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார்,  அர்ஜுனனின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்