​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவகரை பகுதியில் ரயிலில் யானைகள் அடிபட்டு இறந்த இடத்தில் நீதிபதிகள் ஆய்வு

Published : Apr 10, 2022 5:28 PM

நவகரை பகுதியில் ரயிலில் யானைகள் அடிபட்டு இறந்த இடத்தில் நீதிபதிகள் ஆய்வு

Apr 10, 2022 5:28 PM

கோயம்புத்தூர் மதுக்கரை அருகே, யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்திற்கு சென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் உடல் நலக்குறைவாலும், அவுட்டுக்காய் கடித்தும், ரயிலில் அடிபட்டும் என மொத்தம் 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், நவகரை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விபத்து தொடர்பாகவும், யானைகள் அடிபடுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் தொடர்பாகவும் வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.