​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று நடைபெறுகிறது நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பு ஒத்திகை..

Published : Apr 10, 2022 7:36 AM

இன்று நடைபெறுகிறது நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பு ஒத்திகை..

Apr 10, 2022 7:36 AM

டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள சூப்பர் டெக் இரட்டை கோபுரங்களை வெடி வைத்து தகர்க்கும் ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

கட்டட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் இரட்டை கோபுரங்களை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று பிற்பகல் ஒத்திகை நடைபெறுவதால், அரை மணி நேரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்காக போலீசாரும் ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மே 22 ஆம் தேதி இந்த இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட உள்ளதால், அதற்குப் பயன்படுத்தக்கூடிய வெடிப் பொருட்கள், சேதங்கள் குறித்து ஆய்வு நடத்த இன்று பரிசோதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.