​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம் செல்போன் பறிப்பு.. குறுக்கு சந்தில் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்ற இளைஞர்

Published : Apr 09, 2022 6:55 PM



சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம் செல்போன் பறிப்பு.. குறுக்கு சந்தில் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்ற இளைஞர்

Apr 09, 2022 6:55 PM

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரிடம் பைக்கில் வந்து செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையர்களை, அந்த இளைஞர் மடக்கி பிடிக்க முயன்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சாலையில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே இளைஞர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர் அந்த செல்ஃபோனை பிடுங்கிக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். உடனடியாக குறுக்கு சந்து வழியாக சென்று அந்த கொள்ளையர்களை பிடிக்க அந்த இளைஞர் ஓடோடி சென்றார்.

ஒருவழியாக கொள்ளையர்கள் சென்ற பாதையில் சென்று அவர்களை இளைஞர் நெட்டித்தள்ளிய போது உடனே சற்று நிலைதடுமாறிய கொள்ளையர்கள், எனினும் சுதாரித்துக்கொண்டு நொடிப்பொழுதில் பைக்கில் வேகமாக அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.