​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து

Published : Apr 09, 2022 5:31 PM

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து

Apr 09, 2022 5:31 PM

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இன்று அதிகாலையில், மூன்று கட்டிடங்களில் இருந்த 5 கடைகளில் திடீர் விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டிடங்களில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தின் போது கட்டிடத்தில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் 6 தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.