​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஓடி வந்து உதவிய பாதுகாப்பு படையினர்.!

Published : Apr 08, 2022 6:36 AM



டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஓடி வந்து உதவிய பாதுகாப்பு படையினர்.!

Apr 08, 2022 6:36 AM

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் உதவி செய்தனர்.

Anand Vihar மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலுக்காக காத்து கொண்டிருந்தார்.

குழந்தை பிறக்க சில வாரங்கள் இருந்த நிலையில், திடீரென அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த CISF வீரர், உயர் அதிகாரிக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெண் காவலர் தலைமையிலான குழுவினர், உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.