வன்னியர் சமுதாய 10.5 சதவிதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது - எடப்பாடி பழனிச்சாமி
Published : Apr 07, 2022 6:13 PM
வன்னியர் சமுதாய 10.5 சதவிதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது - எடப்பாடி பழனிச்சாமி
Apr 07, 2022 6:13 PM
வன்னியர் சமுதாய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக கொண்டுவந்து அதிமுக சட்டத்தை நிறைவேற்றவில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியது தவறானது என்று குறிப்பிட்டார்.