​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ரசாயன ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

Published : Jan 03, 2020 5:16 PM

சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ரசாயன ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

Jan 03, 2020 5:16 PM

சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள ரசாயன ஆலையை மூடுவது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இரசாயன ஆலைக் கழிவுகளால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் ஆலையை மூடக் கோரி கோவிலூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள குன்றக்குடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

காவல் ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவும் கோரியிருந்தார். ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போராட்டத்திற்கு அவசியம் இல்லை என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தமிழ அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.