​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புறநகர் ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த நபர்

Published : Jan 03, 2020 5:06 PM

புறநகர் ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த நபர்

Jan 03, 2020 5:06 PM

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறநகர் பகுதியில் ரயிலில் எருமை மாட்டுடன் ஒருவர் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சியால்டா மற்றும் டைமண்ட் ஹார்பர் இடையே இயக்கப்படும் அந்த ரயிலில், பயணித்த நபர் ஒருவர் தன்னுடன் தாம் வளர்க்கும் எருமையையும் அழைத்து வந்தார்.  பயணிகள் இருக்கை அருகே கட்டிப் போடப்பட்ட எருமை, பிற பயணிகளுடன் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்தது.

எருமையை ரயிலில் அழைத்து வந்த நபர் குறித்து தெரியவில்லை. எனினும், அதே ரயிலில் பயணித்த நபர் ஒருவர் எடுத்த அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.