​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயார்: நரவானே

Published : Jan 03, 2020 1:36 PM

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயார்: நரவானே

Jan 03, 2020 1:36 PM

அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்தத் தயார் என்று புதிய தலைமை தளபதி எம்.எம்.  நரவானே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும், ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு, ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும், அரசு கேட்டுக் கொண்டால், அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.

ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்ற உடன் அளித்த முதல் பேட்டியிலும், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு இருப்பதாக அவர் கூறியது குறிப்பிட்டத்தக்கது.