​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக். தீவிரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன - ஜெனரல் நரவானே

Published : Jan 03, 2020 8:57 AM

பாக். தீவிரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன - ஜெனரல் நரவானே

Jan 03, 2020 8:57 AM

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர், தீவிரவாதம் என்ற பிரச்சினை புதிதானதல்ல என்றும் பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவதுதான் என்று தெரிவித்தார்.

தற்போதைய மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க உறுதி கொண்டுள்ளதால் எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது சாத்தியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெனரல் நரவானே, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.