​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை

Published : Jan 02, 2020 10:56 AM

நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை

Jan 02, 2020 10:56 AM

நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, நெல்லை கண்ணன் நேற்று பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வன்முறையை தூண்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் அவரின் பேச்சு இருந்ததன் காரணமாகவே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இந்த பேச்சின் ஆழத்தை உணர்ந்து தான் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.