​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்டை நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்

Published : Jan 02, 2020 7:48 AM

அண்டை நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்

Jan 02, 2020 7:48 AM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே  வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மோடி இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரீங், நேபாள பிரதமர கே.பி. சர்மா ஒளி, மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோஹ்லி   உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு கொள்வதே இந்தியாவின் கொள்கை என்று விளக்கிய மோடி, அதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.