​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம்

Published : Jan 01, 2020 5:49 PM

பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம்

Jan 01, 2020 5:49 PM

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.

ரஜோரி மாவட்டம் நவ்சோரா பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்திய படி ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகளை பிடிக்க அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தது. மேலும் துப்பாக்கி சண்டையும் நீடித்தது.