​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 6-ஆம் தேதி தரிசனம் செய்கிறார் குடியரசுத் தலைவர்

Published : Jan 01, 2020 4:45 PM

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 6-ஆம் தேதி தரிசனம் செய்கிறார் குடியரசுத் தலைவர்

Jan 01, 2020 4:45 PM

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிற 6-ந்தேதி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடிதமும் வந்துள்ளது.

அதன்படி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வருகிற 5-ந்தேதி கொச்சிக்கு வரும் குடியரசுத் தலைவர், திங்கட்கிழமை காலையில் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார்.

அவரது வருகையை ஒட்டி சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.