​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டருகே நிறுத்தியிருந்த ஆடி கார் சேதம் - நடிகை ஸ்ரீரெட்டி புகார்

Published : Jan 01, 2020 2:03 PM

வீட்டருகே நிறுத்தியிருந்த ஆடி கார் சேதம் - நடிகை ஸ்ரீரெட்டி புகார்

Jan 01, 2020 2:03 PM

வீட்டருகே நிறுத்தியிருந்த தனது ஆடி காரை சேதப்படுத்திவிட்டதாக, தொலைக்காட்சி சீரியல் புரடக்சன் மேனேஜராக உள்ள ஒருவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் தான் தங்கியுள்ள வாடகை வீட்டருகே சீரியல், வெப்சீரிஸ் தொடர்பான படப்பிடிப்புகள் நடைபெறுவதாகவும், அதற்காக வருபவர்கள் தனது வீட்டின் முன் அமர்ந்து புகைப்பிடிப்பது, வெளியே போகும்போது வரும்போதும் கிண்டல் செய்வது என தொல்லை தருவதாகவும் ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய ஆடி காரை சிலர் சேதப்படுத்தியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கார் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஸ்ரீரெட்டி, தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பில் புரடக்சன் மேனேஜர் ஒருவரே இதை செய்திருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி தங்கியுள்ள வீட்டருகே, ஷூட்டிங் நடைபெறும் வீடு இருப்பதால் இரு தரப்புக்கும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக ஸ்ரீரெட்டி புகார் கொடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.