​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளப்பெருக்கால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கத் தடை

Published : Jan 01, 2020 1:21 PM

வெள்ளப்பெருக்கால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கத் தடை

Jan 01, 2020 1:21 PM

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள கொடிவேரி அணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பவானி சாகர் அணை மீண்டும் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பட்டுள்ளது. இதனால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ள பொதுப்பணித்துறையினர், தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், ஆங்கிலப்புத்தாண்டையொட்டி  அதிகாலை முதலே கொடிவேரி தடுப்பணையில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள்  ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், மீன் வருவல், சாப்பாடு என தற்காலிக கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளும், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.