​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக். தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிப்பு.. இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்..!

Published : Jan 01, 2020 10:48 AM

பாக். தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிப்பு.. இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்..!

Jan 01, 2020 10:48 AM

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ரஜோரி (Rajouri) மாவட்டம், நவ்ஷரா (Nowshera) பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், காரி திரயாட் காட்டுப் பகுதியில் தீவிவாதிகளை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தீவிரவாதிகள் இந்திய எல்லைகளை நோக்கி சிறிய அளவிலான கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்

இந்த அத்துமீறிய தாக்குதலில் நமது வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடக்கிறது. சுமார் 150 நாட்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்எம்எஸ் சேவைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தவிர இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக பிபின் ராவத் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் வாலாட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.