​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை

Published : Oct 28, 2024 1:19 PM

சென்னை திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை

Oct 28, 2024 1:19 PM

சென்னை திருவொற்றியூரில்  வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், கல்வித் துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம்  ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ஏர் குவாலிட்டி மானிட்டர் ஸ்டேஷன் வாகனம் வரவழைக்கப்பட்டு காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.