​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர் அருகே பெண்ணை மஸ்கட் ஏஜென்டிடம் ரூ.1.70 லட்சத்திற்கு விற்ற நபரை கைது செய்த போலீசார்

Published : Oct 25, 2024 12:34 PM

கடலூர் அருகே பெண்ணை மஸ்கட் ஏஜென்டிடம் ரூ.1.70 லட்சத்திற்கு விற்ற நபரை கைது செய்த போலீசார்

Oct 25, 2024 12:34 PM

காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராமத்தை சேர்ந்த ஜெனுபா பானு என்பவரை துபாய் நாட்டில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி மஸ்கட் நாட்டில் உள்ள ஏஜென்டிடம் ஒரு லட்சத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக இஸ்மாயில் என்பவரை சென்னை திருவொற்றியூரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் துபாய் சென்ற ஜெனுபா பானு மஸ்கட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.