​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கிய விமானங்கள்

Published : Oct 25, 2024 7:52 AM

வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கிய விமானங்கள்

Oct 25, 2024 7:52 AM

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை சென்ற 2 விமானங்கள் வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கின.

மதுரை வரவேண்டிய இரு இண்டிகோ விமானங்கள் கனமழை மற்றும் அதிக காற்று வீசியதால் தரையிறக்க முடியாமல் ஒரு மணி நேரமாக வானில் வட்டமடித்தன.

சென்னையிலிருந்து 74 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியிலும், பெங்களூரில் இருந்து 74 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருமங்கலம் பகுதியிலும் வானில் வட்டம் அடித்தன.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு வானிலை சீரான நிலையில் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி 2 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.