​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு

Published : Oct 25, 2024 7:38 AM

சென்னையில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு

Oct 25, 2024 7:38 AM

சென்னையில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பயணியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் மாதனூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் சென்னை அமைந்தகரையிலிருந்து கோயம்பேடு செல்வதற்காக 46G பேருந்தின் முன்பக்க வழியாக ஏறிய போது பின்னால் வந்து டிக்கெட் எடுக்குமாறு நடத்துநர் ஜெகன் கூறியதாக கூறப்படுகிறது.

இதில், ஏற்பட்ட வாய்த்தகராறில் தான் கையில் வைத்திருந்த டிக்கெட் மெஷினால் பயணியின் தலையில் நடத்துநர் தாக்கியதாகவும், பதிலுக்கு அவரின் மூக்கில் பயணி குத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இருவருமே ரத்தத்தோடு பேருந்திலேயே மயங்கி சரிந்ததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் நடத்துநர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.