​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

Published : Oct 25, 2024 6:39 AM

சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

Oct 25, 2024 6:39 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைஞர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் போலி மருத்துவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிருக்கழிப்பாலையைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கவிமணி என்பவர் சளி, காய்ச்சலுக்காக சிதம்பரம் பொன்னம்பலம் நகரிலுள்ள பாலு மருந்தகத்தில் மாத்திரை வாங்கச் சென்றுள்ளார். அங்கிருந்த தளபதி ராஜா என்பவர் ஊசி மூலமாக மருந்து செலுத்திய நிலையில் கவிமணி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.