​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..

Published : Oct 24, 2024 4:18 PM

தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..

Oct 24, 2024 4:18 PM

ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள துணிக்கடை ஒன்றில், தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி, ஆடைகளைத் திருடிய 3 பெண்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா என்ற அந்த மூன்று பெண்களும் கடைகளின் வெளிப்பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளை, கடைக்காரர்கள் கவனிக்காத நேரம் பார்த்து, கட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.