​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரேபிடோ கார் ஓட்டுநரைத் தாக்கிய கணவன், மனைவி கைது..

Published : Oct 24, 2024 3:12 PM

ரேபிடோ கார் ஓட்டுநரைத் தாக்கிய கணவன், மனைவி கைது..

Oct 24, 2024 3:12 PM

சென்னையில் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ரேபிடோ ஓட்டுநரான வினோத்குமார் என்பவரை போனில் அழைத்த  பிரவீனா என்பவர்,  மணலியிலிருந்து செங்குன்றம் செல்ல வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அவர் கூறிய இடத்துக்குச் சென்றபோது, 2 ஆண்கள் காரில் ஏறியதாக கூறப்படுகிறது.

சிறிது தூரத்தில் அவர்கள் இருவரும் வினோத்தைக் கடுமையாகத் தாக்கி, 2 ஆயிரத்து 700 ரூபாயைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரில் பிரவீனா என்ற பெண்ணையும் அவரது கணவரான ராஜி என்பவரையும் கைது செய்த போலீசார், கலை என்பவரைத் தேடி வருகின்றனர்.