​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.. பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை சரி செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு..

Published : Oct 23, 2024 1:07 PM

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.. பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை சரி செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு..

Oct 23, 2024 1:07 PM

காரைக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த குடிநீர் குழாயை ஆட்சியர் திறக்க முயன்ற போது அது நீண்ட நாட்களாக பழுதடைந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடிதண்ணீர் குழாய்களை உடனே சரிசெய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்