​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..

Published : Oct 23, 2024 12:57 PM

திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..

Oct 23, 2024 12:57 PM

 

புதுச்சேரி முதலமைச்சர் பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி திருப்பதியில் 300 ரூபாய்க்கான வி.ஜ.பி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தவரிடம் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி முதல்வரின் பி.ஆர்.ஓ என்று கூறிய பத்மநாபனிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.சி ஜாகியா கானாவின் கடிதத்தை பயன்படுத்தி மோசடி நடந்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது