​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப்-1 முறைகேடு வழக்கில் 4 பல்கலைக் கழகங்கள் சேர்ப்பு: நீதிமன்றம் உத்தரவு

Published : Oct 22, 2024 4:49 PM

குரூப்-1 முறைகேடு வழக்கில் 4 பல்கலைக் கழகங்கள் சேர்ப்பு: நீதிமன்றம் உத்தரவு

Oct 22, 2024 4:49 PM

2019ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் உரிய ஆவணங்களை தர மறுத்ததாக 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகையை தொலைதூர கல்வி வழியில் படித்தவர்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.