​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமல்லபுரத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது

Published : Oct 22, 2024 1:32 PM

மாமல்லபுரத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது

Oct 22, 2024 1:32 PM

மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் அருகே  ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் செல்ல முயன்ற காரை மறித்து, சரியான வழியில் செல்லுமாறு கூறிய காவலரை கடுமையாக தாக்கிய பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரியான வழியில் செல்லுங்கள் என்ற சொன்னதற்காக  காரில் இருந்து இறங்கி வந்து காவலரை சரமாரியாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகின.

காவலர் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் அவர்களை தேடி வந்த மாமல்லபுரம் காவல்துறையினர், சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, சண்முகப்பிரியா, இன்பதாஸ் ஆகிய மூவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.