​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெல்மெட் இல்லாமல் விபரீத வீலிங் சாகசம் சாலையில் பலியான இளைஞர்..!

Published : Oct 21, 2024 6:10 AM

ஹெல்மெட் இல்லாமல் விபரீத வீலிங் சாகசம் சாலையில் பலியான இளைஞர்..!

Oct 21, 2024 6:10 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் காலனியை சேர்ந்த 21 வயது இளைஞர் ரவீந்த்குமார் என்கிற ராகுல், இவர் தனது நண்பர்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வீலிங் சென்றார்.

உளுந்தூர்பேட்டை சேலம் ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீலிங்ஸ் செய்த பொழுது உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழி சாலையில் உள்ள திருச்சி ரோடு ரவுண்டானா பகுதியில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் ராகுல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெல்மெட் அணியாமல் விபரீதமாக வீலிங் செய்த ராகுலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ராகுல் நண்பர்கள் மற்றும் அவர் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். ராகுல் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்

உழுந்தூர் பேட்டை போலீசார் ராகுல் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வீலிங்ஸ் செல்வதும், ரீல்ஸ் எடுப்பதும் சில இளைஞர்களுக்கு பொழுது போக்காக இருக்கலாம் , கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு நிகழ்கால சாட்சி இந்த சம்பவம்.