​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்

Published : Oct 20, 2024 7:26 PM

ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்

Oct 20, 2024 7:26 PM

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அரித்து செல்லப்பட்ட நிலையில் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து பயணம் செய்து வருகின்றனர்.

ஆரணியில் இருந்து காரணி கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள தரைப்பாலம் அரித்து செல்லப்பட்டதால்  புதுப்பாளையம், மங்கலம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலத்திற்கு மாற்றாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பாளையம் - காரணி இடையே நடந்துவரும் உயர்மட்ட மேம்பாலப்பணியை விரைந்து முடிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்