​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது

Published : Oct 19, 2024 6:34 PM

தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது

Oct 19, 2024 6:34 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுத்த பணத்தைக் கையாடல் செய்ததாக இஸ்மாயில் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கிஷோர் கான் என்பவர் தனது அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஹிட்டாச்சி ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொடுத்த 10 லட்சம் ரூபாயில் 9 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை அவரது உதவியாளர் இஸ்மாயில் ஏ.டி.எம் எந்திரத்தில் வைப்பது போல் நாடகமாடிவிட்டு கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனம் ஒன்றில் வசூல் முகவராகவும் பணியாற்றி வரும் இஸ்மாயில், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்து சிக்கி மாட்டிக்கொண்டதால், கிஷோர்கான் கொடுத்த பணத்தைத் திருடி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.