​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 பேக்கரிகளில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள்

Published : Oct 19, 2024 11:48 AM

2 பேக்கரிகளில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள்

Oct 19, 2024 11:48 AM

திருச்சி மாவட்டம், தென்னூர் அருகே ஆழ்வார்தோப்புப் பகுதியில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரண்டு பேக்கரிகளில் கேக் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த எட்டாயிரம் அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

அழுகிய முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 215 கிலோ அளவுள்ள உணவுப் பொருட்களையும் அழித்த அதிகாரிகள், இரண்டு பேக்கரிகளுக்கும் சீல் வைத்து உரிமத்தையும் ரத்து செய்தனர்.