​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

Published : Oct 19, 2024 6:57 AM

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

Oct 19, 2024 6:57 AM

மூளைச்சாவடைந்த செங்கல்பட்டு இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜா, திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்தாலும் மற்றவருக்கு பயன்பட வேண்டுமென நினைத்த அவரது மனைவி நித்யா, உடலுறுப்பு தானத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.