​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் காவல் நிலையத்தில் சிலைத் திருட்டு புகார்

Published : Oct 18, 2024 4:17 PM

முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் காவல் நிலையத்தில் சிலைத் திருட்டு புகார்

Oct 18, 2024 4:17 PM

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தீபங்குடியில் உள்ள சமணர்களின் வழிபாட்டு தலமான தீபநாயகர் கோவிலில் இருந்து கடந்த 2003ஆம் ஆண்டு திருடப்பட்ட தீபநாயகர் செப்புதிருமேனி சிலையை மீட்கக் கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட அந்த சிலை திருடுபோனது குறித்து அறநிலையத்துறையினர் அரசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன்.மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.