​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ரவுடிக் கும்பல் கைது

Published : Oct 18, 2024 10:36 AM

திருச்சியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ரவுடிக் கும்பல் கைது

Oct 18, 2024 10:36 AM

நாட்டுத் துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ராஜ்குமார் என்ற ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேரை, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், குமுளியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக இருந்த அவரை வாகன சோதனையின்போது பிடித்ததாகவும், அவர்கள் வந்த காரில் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சரிவாள்கள், 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.