​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மெரினா கடற்கரையில், எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Published : Oct 17, 2024 6:34 PM

சென்னை மெரினா கடற்கரையில், எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Oct 17, 2024 6:34 PM

சென்னை மெரினாவில், காவலர்கள் எச்சரிக்கையை மீறி நீராட முயன்று கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனியார் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவரின் சடலத்தை மெரினா உயிர் பாதுகாப்புக் குழுவினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாப்பூர் விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அதைமீறி, அவர்களில் 2 பேர் சிறிது தூரம் தள்ளிச் சென்று கடலுக்குள் இறங்கியபோது, பெரிய அலையொன்றில் சிக்கினர்.

இதில், ஒருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் அலையின் தாக்கத்தால் கரை ஒதுக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு மாயமான மாணவர், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.