​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர், பலவஞ்சிபாளையம் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Published : Oct 16, 2024 2:38 PM

திருப்பூர், பலவஞ்சிபாளையம் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Oct 16, 2024 2:38 PM

திருப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் பலவஞ்சிபாளையம் காலனி பகுதியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வீடுகளில் உள்ள உடமைகள் சேதமடைந்தன. குடியிருப்புவாசிகள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.