​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்

Published : Oct 16, 2024 1:45 PM

சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்

Oct 16, 2024 1:45 PM

சென்னையில் விட்டுவிட்டு பெய்துவரும் மழையால், மாதவரம் நெடுஞ்சாலையில், வடபெரும்பாக்கம் மற்றும் வடகரை பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

செங்குன்றம் வரை செல்லக்கூடிய இந்தச் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீரில் சிக்கி சில வாகனங்கள் பழுதாகி நின்றன. சாலையில் தண்ணீர் தேங்கியதால், அச்சாலையில் செல்லும் வாகனங்களை மாற்றுப் பாதையில் போக்குவரத்து போலீசார் திருப்பிவிட்டுள்ளனர்.