​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டில் 390 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

Published : Oct 15, 2024 9:01 PM

செங்கல்பட்டில் 390 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

Oct 15, 2024 9:01 PM

செங்கல்பட்டு மாவட்டத்தின் பேரிடர் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், மதுராந்தகம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு பணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர நேரங்களுக்குத் தேவையான ஜேசிபி எந்திரங்கள் ,ஜெனரேட்டர்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட உபகரணங்கள்  தயார் நிலையில் உள்ளதாகவும் 390 பேரிடர் பகுதிகளில் 290 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

12 மண்டல குழுக்கள் 33 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பேரிடர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினர்.